அட்டாளைச்சேனையில் அபிவிருத்திப் பெருவிழா; மு.கா. தலைவர் கலந்துகொள்கிறார்

🕔 August 24, 2017

– சப்னி அஹமட் –

ட்டாளைச்சேனையில்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அபிவிருத்தி பெருவிழா எனும் மகுடத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்துள்ளார்.

இவ் விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம, கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட். ஏ. நசீர் அஹமட், சுகாதார பிரதி அமைச்சர் பைஷால் காஸிம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இவ்விழாவில்;

• அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் விடுதி, அவசர விபத்துப் பிரிவு, நுழைவாயில் ஆகியவற்றுக்கான அடிக்கல் நடல்.
• சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய விடுதிக்கான அடிக்கல் நடல்.
• கால்நடை வைத்திய அதிகாரி காரியாலமும் சுற்று மதிலும் திறந்து வைத்தல்.
• ஷரீப் ஹாஜியார் வீதிக்கு ‘காபட்’ இடும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு.
• அஸ்ரப் ஞாபகார்த்த பொதுவிளையாட்டு மைதான அபிவிருத்தி அங்குரார்ப்பனம்.
• கப்பலடி வீதிக்கு ‘காபட்’ இடும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு.
• அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியாசாலையில் வைத்திய அதிகாரிகள் விடுதி திறந்து வைப்பு.
• ஆலம்குள பிரதேச அபிவிருத்தி
• பல் தேவைக் கட்டிடம் திறந்து வைத்தல்.
• ஆரம்ப மருத்துவ பாராமரிப்பு பிரிவு திறந்து வைத்தல்.

ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

அன்றைய தினம் மாலை, அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்