நல்லாட்சியில் கூலி பெறும் பொதுபல சேனா; முஸ்லிம்களை நுணுக்கமாக எதிர்கொள்ள முனைகிறது

🕔 August 15, 2017

– அ. அஹமட் –

ற்போதைய ஆட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்பு அபரிதமானதெனலாம். அதிலும்,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் செயற்பாட்டை மிகவும் கச்சிதமாக பொதுபலசேனா செய்திருந்தது. அதற்கான பலா பலன்களை தற்போது அவ் அமைப்பினர் பெற ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளருக்கு, சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

நான்கு பொலிஸ் குழுக்கள் போட்டு தேடிய ஞானசார தேரர், கடைசியில் ராஜமரியாதையுடன் பிணையில் சென்றார்.

அடுத்த கட்டமாக நேற்று பிற்பகல் மாத்தறை வேஹெஹேன பூர்வாராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில், கிரம விமலஜோதி தேரருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் என்ற பதவிக்கான நியமன ஆவணத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்துள்ளார். இவர் பொதுபல சேனா அமைப்பின் ஸ்தாபக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. அளுத்கம கலவரம் இடம்பெற்ற காலப்பகுதியில், இவரே அவ் அமைப்பின் தலைவராகஇருந்தார்.

பொதுபல சேனா அமைப்பானது தோற்றுவிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை, முஸ்லிம்களுக்கு விரோதமான செயற்பாட்டையே பிரதானமாக கொண்டுள்ளது. இதன் தலைவர் எப்படியானவராக இருப்பார் என்பதை யாரும் வார்த்தைகளால் எழுதி விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனலாம்.

நேற்றைய நிகழ்வில், குறித்த தேரரை ஜனாதிபதி மைத்திரி மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார். இவரை பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒழுக்கமிக்க ஒருவராகவும் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரியும் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையை கொண்டிருப்பதால், பொதுபல சேனாவின் செயற்பாடுகள்அனைத்தும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளாகவே அவருக்குத் தெரியும். அதன் முன்னாள் தலைவர் பௌத்த மதத்தை பாதுகாக்கும் செயற்பாட்டாளராகவும் தெரிகின்றார்.

இவ்வாறான ஒருவருக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளமையானது ஆபத்தின் அறிகுறியாகும். இதனை இவ்வாட்சிக்கு பொதுபல சேனா அமைப்பு செய்த உதவிக்கான பரிகாரமாகவும் நோக்கலாம். இன்றைய ஆட்சியில் பொதுபல சேனவின் பல சிந்தனைகள் அரச அங்கீகாரத்தோடு இடம்பெறுகின்றன. இதனால், மிகவும் நுணுக்கமான முறையில் இவர்கள் முஸ்லிம்களை எதிர்கொள்ள முனைகிறார்களா என்ற அச்சமும் எழுகிறது.

(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்