புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

🕔 July 29, 2017

ரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்ட போதும், அந்த அமைப்பின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதாக அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், புலிகளின் சொத்துக்கள் தொடர்ந்தும் முடக்கப்பட்டே இருக்கும் என, ஒன்றியம் தெரிவித்டதுள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய இயக்கங்களின் சொத்துக்களை முடக்குவதாக, கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் திகதி ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.

இதன்படி, விடுதலைப் புலிகளின் சொத்துக்களையும் ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்