நான் பொறுப்பேற்ற பிறகு, பொருட்களை சதொச இறக்குமதி செய்வதில்லை: நாடாளுமன்றில் அமைச்சர் றிசாட்

🕔 July 28, 2017

கொக்கெய்ன் சம்பவத்துக்கும் சதொச நிறுவனத்துக்கும் இடையில் எந்தவிதமான தொடர்புகளும் கிடையாது என்று,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, சபையின் இன்று வெள்ளிக்கிழமை எழுப்பிய வாய் மூல வினாவுக்கு பதில் அளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

“சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் நேரடியாக இறக்குமதி செய்யவில்லை. தனியார் வழங்குநர் மூலமே பொருட்களை இறக்குமதி செய்கின்றோம்” என்றும் அவர் கூறினார்.

சீனிக் கொள்கலனில் கொக்கெய்ன் இருந்ததை கண்டுபிடித்த சதொச ஊழியர்கள்தான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.  இப்போது அந்த விடயம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணை முடிவுறும் வரை, இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து, எந்தப் பொருட்களையும் சதொச நிறுவனம்  கொள்வனவு செய்வதை, தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்