நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு; இருவர் கைது

🕔 July 23, 2017

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இளஞ்செழியனின் பாதுகாப்பு பொலிஸார் மீது நேற்று சனிக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது காயமடைந்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை இவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இளஞ்செழியன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவருடைய பாதுகாப்பு பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது, நல்லூர் தெற்கு வீதி பகுதியில் பாதுகாப்பு பொலிஸாரை வழி மறித்து தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள், அவர்களுடைய துப்பாக்கியை பறித்து, அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர்.

இதன்போது இரு பொலிஸாரும் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்