ஆசிரியர், பெற்றோருக்கு இடையில் கை கலப்பு; இரு தரப்பும் வைத்தியசாலையில் அனுமதி

🕔 June 30, 2017

– க. கிஷாந்தன் –

பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தால், பாடசாலையொன்றுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த பாடசலையின் ஆசிரியர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாணவி ஒருவரை இரும்பு கம்பியால் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் இன்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்வதற்கு சென்ற பெற்றோர்களுக்கும் குறித்த ஆசிரியருக்கும் முறுகல் நிலைமை உருவாகியது.

இதனை தொடர்ந்து ஆசிரியரும் பெற்றோர்களும் அங்கிருந்த மாணவர்கள் சிலரும் கைகலப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தாக்குதலுக்குள்ளான பெற்றோர் ஒருவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்