தெரிந்ததைச் சொல்ல ஏன் தயக்கம்; யாருக்கு அச்சப்படுகிறார் ஹக்கீம்

🕔 June 24, 2017

– அ. அஹமட் –

“முஸ்லிம்கள் மீது இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தாக்குதல் எங்கிருந்து வருகின்றன என்று எமக்கு தெரியும்” என, அமைச்சர் ஹக்கீம் அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது   கூறியிருந்தார். மேலும், அது, வெளியில் சொல்ல முடியாத அளவு பாரதூரமானது எனவும் கூறியிருந்தார்.

அமைச்சர் ஹக்கீம் இதனை மிகச் சாதாரணமாக கூறியிருந்தாலும், இது சாதாரண விடயமல்லஅதற்கு முன்பு இலங்கையில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை குற்றம் சாட்டிக்கொண்டிருந்த அமைச்சர் ஹக்கீம், இவ்வாறு கூறியிருப்பதானது, அதன்பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இல்லை என்பதை தெளிவாக நிரூபணம் செய்கிறதுஇதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இருந்தால், அதனை முதலில் வெளிப்படுத்துபவராக அமைச்சர் ஹக்கீமே இருந்திருப்பார்.

பெரும்பான்மையின முக்கிய  அமைச்சர்கள் உட்பட பல முக்கிய அரசியல் வாதிகள், ஞானசார தேரரின்பின்னால் யார் உள்ளார் என்பதில் தர்க்கித்து கொண்டிருக்கின்றனர். முஸ்லிம் சமூகம் இதுதொடர்பில் எந்த விதமான முடிவும் எடுக்க முடியாமல் நிர்க்கதியான ஒரு நிலையில் உள்ளது. 

இவ்வாறான நிலையில், அமைச்சர் ஹக்கீம் அதனை அறிந்தும் மறைப்பது ஏன் என்ற விடயமே அவர்மீதான சந்தேகத்தை கிளறி விடுகிறது. இது அவர் முஸ்லிம் சமூகத்துக்கு செய்கின்ற மிகப் பெரும்துரோகமும் கூட. அந்த உண்மைகளை வெளிப்படுத்துவதில், என்ன பாரதூரமான விளைவு ஏற்படப்போகிறதோ தெரியவில்லை. அதனை அமைச்சர் ஹக்கீம் சற்று தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

அமைச்சர் ஹக்கீம் இந்த விடயங்களை மறைப்பதனால், அது அரசியல் லாபங்களுக்கு அல்லாமல், வேறு எதற்குமாகவும்  இருக்க முடியாது. இன்றைய நிலையில் அமைச்சர் ஹக்கீமின் அரசியல் லாபங்களை இவ்வாட்சியாலர்களிடமிருந்தே அதிகம் பெற்றுக்கொள்ள முடியும்தமிழ் தேசியக்கூட்டமைப்புடனான அவரின் உறவு என்ற விடயத்தையும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்வது பொருத்தமானதாக இருக்கும். அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றானது, பொது பலசேனாவின் பின்னால் முன்னாள் ஜனாதிபதி இல்லை என்ற விடயத்தை நிறுவிச் செல்வதோடு, இவ்வாட்சியாளர்கள் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

நோர்வே உடன் நெருக்கமான உறவுகளை பேணிவரும் இந்திய புலனாய்வு பிரிவுடன்  தேர்தல் செலவுக்கு பணம் பெற்றவர் என குற்றம் சுமததப்படும் ஹக்கீம், பொதுபல சேனா மற்றும் முஸ்லிம் விரோத தாக்குதல்  ரகசியங்களை உடனடியாக வெளியிட வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்