எங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும், இரட்டைக் குடியுரிமை கிடையாது: சுமந்திரன் தெரிவிப்பு

🕔 May 15, 2017

மிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரட்டைக்கு குடியுரிமையினைக் கொண்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லையென்று, அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமது கட்சிக்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம், எந்தவொரு உறுப்பினர்களும் இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 04 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரட்டைக் குடியுரிமைகள் உள்ளன என்று, அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்ட விடயங்களை சுமந்திரன் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்