வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளக் கட்டியமைக்க ஒத்துழைப்பு வேண்டும்: அமைச்சர் றிசாத் கோரிக்கை

🕔 May 4, 2017

டக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிந்து போன தொழிற்சாலைகளை புனரமைப்புச் செய்து மீண்டும் வினைத்திறன் கொண்ட தொழிற்சாலைகளாக அவற்றை இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளது என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

இதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் கீழ் வரும் நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள், குழுமங்களின் மீளமைக்கப்பட்ட பதிவுக்கட்டணங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான பத்திரத்தை சமர்ப்பித்து சபையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்;

“கடந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநயக்கவின் பிரேரணையில் கூறப்பட்டதற்கிணங்க, இந்தக் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

வடக்குக் கிழக்கில் கைத்தொழிற்சாலைகளை வினைத்திறனாக்குவதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் இதனால் பாரிய பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமெனவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்