ஆணொருவர் இலங்கையில் கர்ப்பம்; அதிர வைத்தது பரிசோதனை அறிக்கை

🕔 April 19, 2017

சூரியயவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளதாக வைத்தியசாலை பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. இதனால், குறித்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

சூரியவெவ வைத்தியசாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆணொருவருக்கு வழங்கப்பட்ட பரிசோதனை அறிக்கைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வைத்தியரின் பரிந்துரைக்கமைய குறித்த நபரின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் வைத்தியர் ஒருவரிடம் காட்டப்பட்டுள்ளன.

அறிக்கைகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வைத்தியர், குறித்த அறிக்கைகளுக்கு அமைய அந்த ஆண் கர்ப்பமடைந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதென தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த போது, குறித்த நபருக்கு தவறான பரிசோதனை அறிக்கை வழங்கப்பட்டிருந்தமை தெரிய வந்தது.

இவ்வாறு பல நோயாளிகளுக்கு தவறான வைத்திய அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் இதன்போது அறிய முடிந்தது. இதனால், நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியினர். சில நோயாளர்கள் அவமானம் காரணமாக இவ்வாறான விடயங்களை யாரிடமும் கூறுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

வைத்திய பரிசோதனை கூடத்தில் வைத்திய பரிசோதனை கூட ஆய்வாளர் ஒருவர் இருப்பது அவசியமாகும்.

எனினும் குறித்த பிரதேசத்தின் வைத்திய பரிசோதனை கூடத்தினுள் சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை எழுதியவர்களே சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக சூரியவெவ பிரதேச வைத்தியசாலை அதிகாரி வைத்தியர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களுக்கும்  அவர்கள் பெற்றுக் கொள்ளும் வைத்திய அறிக்கைக்கும் இடையில் சில சந்தர்ப்பங்களில் எவ்வித தொடர்பும் இருப்பதில்லை என தான் அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்