கோமாரி விபத்தில் இருவர் பலி

🕔 May 24, 2015

Acctdent - 01– ரி. சுபோகரன் –

கோமாரி 60 ஆம் கட்டை பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில், இருவர்  பலியானார்கள்.

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும்  நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து சென்ற பஸ் வண்டியுடன், ஊரணிப் பிரதேசத்திலிருந்து பயணித்த மோட்டார் வண்டி மோதியதாகவும், இதன்போது – மோட்டார் வண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரியவருகிறது.

விபத்தில் பலியான இரு இளைஞர்களும் கோமாரிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்