சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம்
சிகரட்களை உதிரிகளாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விசேட அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிக்கப்படும் என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதேவைள, அத்துடன் சிகரட் புகைப்பவர்களின் தொகை, வீதம் 47 ஆக குறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மல்வானை, பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இலங்கையில் போதைப்பொருள் பாவனை விடயத்தில் கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றார்.
இதன்பிரகாரம் புகைத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்இந்நிலையில் தற்போது விற்பனை நிலையங்களில் தனிநபர் தாராளமாக சிகரட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும். தனிநபர் உதிரிகளா சிகரெட் கொள்வனவு செய்துகொள்வது அதிகமாக உள்ளது. இதனால் சிகரட் விற்பனை அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு தடை விதிக்கவுள்ளோம்.
இதற்கிணங்க சிகரட்களை உதிரிகளாக கொள்வனவு செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. செவ்வாய்க்கிழமை இதற்கான அமைச் சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளேன்.
இதன்பின்னர் உதிரியாக சிகரட் கொள்வனவு செய்ய முடியாது. சிகரெட் பக்கெட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும். இதனால் தனிநபரின் சிகரெட் கொள்வனவை எம்மால் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.