சிகரட் உதிரியாக விற்பனை செய்யத் தடை: சமர்ப்பிக்கப்படுகிறது, அமைச்சரவைப் பத்திரம்

🕔 March 20, 2017

சிகரட்களை உதிரிகளாக விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் விசேட அமைச்சரவைப் பத்திரம், நாளை சமர்ப்பிக்கப்படும் என்று, சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

இதேவைள, அத்­துடன் சிகரட் புகைப்­ப­வர்­களின் தொகை, வீதம் 47 ஆக குறைவடைந்துள்ளதா­கவும் அவர் கூறினார்.

மல்­வானை, பிர­தே­சத்தில் நேற்று நடை­பெற்ற மருத்­துவ முகாம் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அமைச்சர் மேற்­கண்­ட விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இலங்­கையில் போதைப்­பொருள் பாவனை விட­யத்தில் கடு­மை­யான சட்­ட­திட்­டங்கள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன. இதற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பூரண ஒத்துழைப்­பு­களை வழங்கி வரு­கின்றார்.

இதன்­பி­ர­காரம் புகைத்தல் நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­து­வதற்கு பல்­வேறு திட்டங்களை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்றோம்இந்­நிலையில் தற்­போது விற்­பனை நிலை­யங்­களில் தனி­நபர் தாரா­ள­மாக சிக­ரட்­களை கொள்­வ­னவு செய்­து­கொள்ள முடியும். தனி­நபர் உதிரிகளா சிகரெட் கொள்­வ­னவு செய்­து­கொள்­வது அதி­க­மாக உள்ளது. இதனால் சிகரட் விற்­பனை அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. இதற்கு தடை விதிக்கவுள்ளோம்.

இதற்­கி­ணங்க சிகரட்களை உதிரிகளாக கொள்­வ­ன­வு செய்வதற்கு தடை விதிக்கும் வகையில், புதிய சட்டம் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது. செவ்­வாய்­க்கி­ழமை இதற்கான அமைச் ச­ரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளேன்.

இதன்­பின்னர் உதிரியாக சிகரட் கொள்­வ­னவு செய்ய முடி­யாது. சிகரெட் பக்கெட்களை மாத்திரமே கொள்வனவு செய்ய முடியும். இதனால் தனிநபரின் சிகரெட் கொள்வனவை எம்மால் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்