நீதிமன்றம் சென்று திரும்பிய நபர், துப்பாக்கிச் சூட்டில் பலி

🕔 January 18, 2017

Gun - 01நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர், ஹோமாகம – பிட்டிபன பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிந்துள்ளார்.

சனா என அழைக்கப்படும் சமிந்த பெரேரா எனும் 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரே, துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டதாகத் தெரிய வருகிறது.

தாக்குதலுக்குள்ளான நபர், ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்குச் சென்று, முச்சக்கர வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில், குறித்த  நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே மரணமானார் எனத் தெரியவருகிறது.

இவர் மீகொட பிரதேசத்தைச் சேர்ந்தவராவார..

Comments

புதிது பேஸ்புக் பக்கம்