சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு, மலையகத்தில் அஞ்சலி

🕔 December 26, 2016

tsunami-022– க. கிஷாந்தன் –

சுனாமி இடம்பெற்று இன்று திங்கட்கிழமையுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில், உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக காலை 9.25க்கு சுனாமி அனர்த்தம் இடம்பெற்றது.

இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர்.

ஹட்டன் பொலிஸார் மற்றும் நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் இதில் கலந்துக்கொண்டனர்.tsunami-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்