உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பில், பெப்ரல் தாக்கல் செய்த மனுவினை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி

🕔 November 3, 2016

Supreme court - 012த்தி வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்குமாறு, அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி, பெப்ரல் அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்ய, உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை, குறித்த மனுவினை பரிசீலணைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள, உள்ளூராட்சி மன்றங்களுக்கு தேர்தலை நடத்தும் வாய்ப்பு உள்ளதாக, மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது குறிப்பிட்டார்.

எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினத்தை அறிவிக்குமாறு, அரசாங்கத்திற்கு உத்தரவிடும் படி, அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.

இதன்படி விடயங்களை ஆராய்ந்த மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்ததோடு, சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தேர்தல்கள் ஆணையகத்தின் உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்