வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை, வட மாகாண சபை தடுக்கிறது: சம்பந்தன் முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு

🕔 October 30, 2016

Sumanthiran - 0112டக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில், வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும்  என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கிலிருந்த முஸ்ஸிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 26 வருடங்கள் பூர்த்தியாவதை ஒட்டி,  இன்று ஞாயிற்றுக்கிழமை வடமாகாண முஸ்லிம் சிவில் சமூகம் விஷேட கலந்துரையாடல் நிகழ்வொன்றினை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. இதில்  கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே, மேற்கண்ட விடயங்களை சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;

“வடமாகாண சபை வேண்டுமென்றே மிகத் தெளிவான முறையில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. அதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். இந்த நிலை மாற வேண்டும்.

வடக்கில் வாழ்ந்த அனைவரும் மீள்குடியேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்” என்றார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரா. சம்பந்தன், பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர் ஹூனைஸ் பாரூக் மற்றும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்