கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட, 17 பேர் காயம்

🕔 September 7, 2016

Accident - 01133– எப். முபாரக் –

ஹொரவ்பொத்தான பகுதியில் கெப் ரக வாகனமொன்று, இன்று புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 17 பேர் ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹொரவ்பொத்தான – வவுனியா பிரதான வீதியில் இன்று அதிகாலை, குறித்த வாகனம் வேகக்கட்டுப்பாட்டை மீறி, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியை சேர்ந்தவர்களாவர். இவர்களில் 09 ஆண்களும் 04 பெண்களும்  மற்றும் 04 சிறுவர்கள் அடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கெப்பித்திகொல்லாவ நகரில் நேற்றிரவு இசை நிகழ்ச்சிக்கு  சென்று, இன்று அதிகாலை திரும்பிக் கொண்டிருந்த கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 17 பேரில், தற்போது 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்