இலங்கை பொலிஸ்; பெயரை மாற்ற அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை பொலிஸாருக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த பெயரை மாற்றுவதற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிணங்க, ‘ஸ்ரீலங்கா பொலிஸ் டெபாட்மென்ட்’ (Sri Lanka Police Department) என்று, இதுவரை காலமும் அழைக்கப்பட்டு வந்த பெயரை, ‘ஸ்ரீலங்கா பொலிஸ்’ என மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதன் பிறகு, ஸ்ரீலங்கா பொலிஸ் என்றே, இலங்கை பொலிஸார் அழைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.