கல்லடி ஆற்றில் குதித்து, இளைஞர் தற்கொலை முயற்சி
🕔 July 3, 2016
– பழுலுல்லாஹ் பர்ஹான் –
மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து சுமார் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேற்படி இளைஞரைக் காப்பாற்றும் முயற்சியில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், கல்லடி பழைய பாலத்தில் பெரும் திரளான மக்கள் கூடியுள்ளனர்.
மட்டக்களப்பு கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த கிஷோர் என்பவரே, இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.