மஹிந்தவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம்

🕔 June 24, 2016

Mahinda - 022ஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு, நேற்றைய தினம் முதல் – முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

மஹிந்தவின் பாதுகாப்புக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோ, நெருக்கமான பாதுகாப்பு உத்தியோகத்தரான மேஜர் நெவில் வன்னியாரச்சி உள்ளிட்ட ஐந்து உயர் ராணுவ அதிகாரிகள் – மஹிந்தவின் பாதுகாப்பு பணிகளிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதன்படி, மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட மொத்த ராணுவப் பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது.

மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்கிய ராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டனர்.

இறுதியாக ஐந்து உயர் ராணுவ அதிகாரிகள், மஹிந்தவின் ஜப்பான் விஜயம் நிறைவடையும் வரையில் வாபஸ் பெற்றுக்கொள்ளப்படவில்லை.

மஹிந்தவின் ஜப்பான் விஜயத்தைத் தொடர்ந்து இந்த உயர் ராணுவ அதிகாரிகளும் ராணுவத் தலைமையகத்திற்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

மஹிந்தவின் ராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து, கூட்டு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் விசேட அதிரடிப்படையின் பயிற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்