தகவல் அறியும் சட்டமூலம்; இன்று வாக்கெடுப்பு
தகவல் அறியும் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெறுகிறது.
சபாநாயகரின் தலைமையில் காலை 10 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதம் நடைபெற்ற வருகிறது.
இந்த வாதப்பிரதிவாதங்களை தொடர்ந்து தகவல் அறியும் சட்டமூலம் குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெறுவதுடன், அது குறித்த இறுதி தீர்மானமும் எட்டப்படவுள்ளது. மேலும் தகவல் அறியும் குழு ஒன்றை அமைப்பது தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளது.