அஸர் தொழுகையின் பின்னர், அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்

🕔 June 16, 2016


– அஸ்ரப் ஏ சமத் –

முன்னாள் ஆளுநர் அலவி மொலானாவின்  ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின் தெஹிவளை ஜும்ஆப் பள்ளிவசல் மையவாடியில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனா்.

தெஹிவளை பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம்பெற்றதன் பின்னர், நல்லடக்கம் இடம்பெற்றது.

முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, அமைச்சர் ரஊப் ஹக்கீம் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் – ஜனாஸாவைப் பார்வையிட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்