வடபுல முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி, சாய்ந்தமருதிலும் கையெழுத்து சேகரிப்பு

🕔 June 12, 2015

Signature - Sainthamaruthu - 02– எம்.வை. அமீர் –

ட மாகாணத்திலிருந்து 1990 ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை – மீள்குடியேற்றக் கோரி, இரண்டு லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில், இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியூதீனின் அமைச்சின் கீழுள்ள, ஏற்றுமதி அதிகாரசபையின் இணைப்பாளர் ஏ.எல்.முக்தார் (ஜஹான்) தலைமையில், மேற்படி கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, கருத்துத் தெரிவித்த – ஏற்றுமதி அதிகாரசபையின் இணைப்பாளர் ஏ.எல்.முக்தார் (ஜஹான்); வாழ்விடங்களை இழந்து – அகதி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில், அமைச்சர் றிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வரும் பங்களிப்பை பாராட்டியதுடன், வடபுல மக்களின் துன்பத்தில் அக்கறைகொள்ளும் அனைவரும் இந்த கையெழுத்திடும் நிகழ்வில் இணைந்து கொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.Signature - Sainthamaruthu - 03Signature - Sainthamaruthu - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்