முஷாரப்பின் கருத்து மலிவானவை; திம்புலாகல பிரதேச செயலாளர் தெரிவிப்பு: விவாதத்துக்கு வருமாறும்அழைப்பு 0
இலங்கை நிர்வாக சேவையிலுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் சிரேஷ்ட அதிகாரிகள் – கிழக்கு மாகாண சபையிலுள்ள முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட தகுதியற்றவர்கள் என்றும், அவர்களுக்கு சிங்களம் மற்றும ஆங்கிலம் போன்ற பாசைகள் தெரியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரிவித்தமையானது மிகவும் மலினமான கருத்து என்று, திம்புலாகல பிரதேச செயலாளர் ஏ.எல். அமீன் தெரிவித்துள்ளார்.