Back to homepage

அம்பாறை

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மனைவி காலமானார்

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மனைவி காலமானார் 0

🕔16.Jun 2017

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹும் மசூர் சின்னலெப்பையின் மனைவி கிதுருன்நிசா இன்று வெள்ளிக்கிழமை காலமானார். குறுகிய காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர், கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமானார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர், கார்கோ லங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான றியா, றியாஜத்  மற்றும் றீஸ்மா ஆகியோரின் தாயாருமாவார். ஜனாஸா, கொழும்பிலிருந்து

மேலும்...
ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை

ஹக்கீமின் இப்தாரை புறக்கணித்து, மானமுள்ளவர்கள் என்பதை, அட்டாளைச்சேனை மக்கள் நிரூபிக்க வேண்டும்: புத்திஜீவிகள் கோரிக்கை 0

🕔15.Jun 2017

– நவாஸ் – மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நாளை வெள்ளிக்கிழமை கலந்து கொள்ளும் இப்தார் நிகழ்வினை, அந்த ஊரின் மானமுள்ள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர். அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை  தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் பெயரால் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்ற ரஊப் ஹக்கீமையும், அவர் கலந்து

மேலும்...
ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து

ஆட்சியாளர்களின் ‘இப்தார்’களைப் புறக்கணிப்பது, எதிர்மறை விளைவினை ஏற்படுத்தலாம்: ஹனீபா மதனி கருத்து 0

🕔15.Jun 2017

– எம்.எல். சரீப்டீன் –ஆட்சியாளர்கள் நடத்துகின்ற இப்தார் நிகழ்வை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளகங்களில் செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிடுவது இஸ்லாமியப் பார்வையிலும், அரசியல் நோக்கிலும் ஆரோக்கியமான விடயமாகத் தோன்றவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், மு.காங்கிரசின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அம்பாரை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தெரிவித்துள்ளார்.முஸ்லிம் விரோத செயற்பாடுகளை

மேலும்...
அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அரசியல் கட்சியின் நிகழ்வு; அனுமதி வழங்கியோர் தண்டிக்கப்பட வேண்டும்

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் அரசியல் கட்சியின் நிகழ்வு; அனுமதி வழங்கியோர் தண்டிக்கப்பட வேண்டும் 0

🕔14.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழு ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வினை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடத்துவதற்கு இடம் வழங்கியுள்ளமை குறித்து, சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.

மேலும்...
காலக்கெடு வழங்குங்கள், தீர்வு கிடைக்காது விட்டால் எதிரணியில் அமருங்கள்: அதாஉல்லா அறிவுறுத்தல்

காலக்கெடு வழங்குங்கள், தீர்வு கிடைக்காது விட்டால் எதிரணியில் அமருங்கள்: அதாஉல்லா அறிவுறுத்தல் 0

🕔12.Jun 2017

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகள் தொடருமாயின், அரசாங்கத்துடன் இணைந்துள்ள 21 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையிலுள்ள எதிரணி ஆசனங்களில் அமர வேண்டுமென, தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில்

மேலும்...
ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள்

ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில், தலைமறைவான மு.கா. பிரதிநிதிகள் 0

🕔12.Jun 2017

– நவாஸ் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு, மு.கா. தலைவர் மற்றும் அம்பாறை மாவட்ட மு.கா. பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்தக் கட்சியைச் சேர்ந்த எவரும், மேற்படி நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தம்மைத் தாமே புறமொதிக்கிக் கொண்டமை குறித்து, பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் இப்தார் நிகழ்வு; சிறப்பாக நிகழ்ந்தேறியது 0

🕔11.Jun 2017

– றிசாட் ஏ காதர், படங்கள்: கே.ஏ. ஹமீட் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பேரைவயின் தலைவர் கலாபூஷணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று ‘ஆசியன் ஷெப்’ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுத்தீன், அம்பாறை மாவட்ட

மேலும்...
ஜெமீல் தலைமையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதி

ஜெமீல் தலைமையில் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வைப்பு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதி 0

🕔11.Jun 2017

– எம்.வை. அமீர் – பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீலின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பயனாளர்களுக்கு

மேலும்...
அமைச்சுப் பதவியை தூக்கி வீசத் தயார்: சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட்

அமைச்சுப் பதவியை தூக்கி வீசத் தயார்: சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாட் 0

🕔11.Jun 2017

முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும், வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, இலவச மூக்குக்கண்ணாடி

மேலும்...
அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது

அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது 0

🕔10.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனையில் நிர்மாணித்துள்ள புதிய வீட்டுக்கான பாதையொன்று, அரசாங்கத்தின் 60 லட்சம் ரூபா நிதியில், காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 450 மீற்றர் தூரம் கொண்டதாக, இந்த வீதி அமைக்கப்படவுள்ளது. குறித்த பாதையில், அமைச்சர் நசீருடைய வீட்டைத் தவிர, வேறு வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔10.Jun 2017

– எம்.வை. அமீர்- முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம

மேலும்...
அட்டாளைச்சேனையில் வேலை வாய்ப்பு; அனுபவமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம்

அட்டாளைச்சேனையில் வேலை வாய்ப்பு; அனுபவமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம் 0

🕔10.Jun 2017

கண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளில் அனுபவமுள்ள ஒருவர், அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள ரொஸ்னி கிளாஸ் சென்ரர் (Rosny glass center) இல், பணியாற்றுவதற்கு தேவைப்படுகிறார். மிக நீண்ட காலமாக அட்டாளைச்சேனையில் இயங்கி வரும் ரொஸ்னி கிளாஸ் சென்ரர்,  கண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளுக்கு நம்பகமானதும், பிரபல்யமுடையதுமான இடமாகும். இங்கு பணியாற்றுவதற்கு குறித்த

மேலும்...
பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர்

பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர் 0

🕔9.Jun 2017

இறக்காமம் முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களில்  இலவசமாக குடிநீர் இணைப்பினைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளிடமிருந்து, பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவினர் தமது மறுப்பினைத் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிக்காரர்கள் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான செய்தியினைப் பரப்பி விட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறக்காமத்திலுள்ள முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களிலுள்ள 80

மேலும்...
இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம்

இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம் 0

🕔8.Jun 2017

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – இறக்கமாம் பிரதேசத்துக்குட்பட்ட இண்டு கிராமங்களுக்கு  இலவசமாகக் குடிநீர் இணைப்பை வழங்கும் பொருட்டு, சஊதி அரேபிய நிறுவனமொன்று முழுமையான நிதியினை வழங்கியிருந்தபோதும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பயனாளிகளிடமிருந்து ஒரு தொகைப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய கிராம மக்களுக்கு

மேலும்...
பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார்

பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார் 0

🕔7.Jun 2017

– மப்றூக் – ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும், சாரணிய செயற்பாட்டாளரும், மூத்த ஊடவியலாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்து, அன்னார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில காலமாக முஸ்தபா நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் அம்பாறை மாவட்டம் – கல்முனை பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார். 1945ஆம் ஆண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்