வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம் 0
வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு