Back to homepage

பிரதான செய்திகள்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம்

வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கான சமிக்ஞைகள் தென்படுகின்றன: எருக்கலம்பிட்டியில் ஹக்கீம் 0

🕔30.Jan 2018

  வன்னியில் இழந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், முதற்கட்டமாக முசலி பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.வன்னி அமைச்சருக்கு பாடம் புகட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்ற சமிக்ஞைகள் தென்பட ஆரம்பித்துவிட்டன என்றும் அவர் கூறினார்.மன்னார் எருக்கலம்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு

மேலும்...
வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம்

வீட்டுச் சுவரில் ‘போஸ்டர்’ ஒட்டி சேதப்படுத்தி விட்டீர்கள்; ஜனாதிபதியிடம் நஷ்டஈடு கோரி, காத்தான்குடி வேட்பாளர் கடிதம் 0

🕔30.Jan 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் – ஜனாதிபதியின் வருகை முன்னிட்டு, ஜனாதிபதியின் விளம்பரங்களை ஒட்டுவதற்காக, தனது வீட்டு மதில் சுவர் பயன்படுத்தப்பட்டதால், அது சேதமடைந்துள்ளதாகவும் அதற்காக தனக்கு 7,000 ஆயிரம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபைக்கான வேட்பாளர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் வேட்பாளர் ஏ.எல்.எம். சபீல், இன்று

மேலும்...
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்கு, இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம் வழங்கியது 0

🕔30.Jan 2018

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை இடைக்கால தடை விதித்துள்ளது. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னிணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு வௌியாகும் வரையில், அந்த பிரதேச

மேலும்...
பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம்

பிரசாரக் கூட்டத்துக்கு சென்றவர்கள் மீது சோதனை கெடுபிடி; பொதுமக்கள் விசனம் 0

🕔30.Jan 2018

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்ற பொதுமக்கள், பொலிஸாரின்  தீவிர சோதனைக் கெடுபிடிக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை  புதுக்குடியிருப்பில் பதிவாகியுள்ளது.மேற்படி கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரா. சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.புதுக்குடியிருப்பு ஐயன்கோவிலுக்கு அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதுக்குடியிருப்பு பிரதேச

மேலும்...
நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாடு முழுவதும் மழை பெய்யும்; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jan 2018

நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமே இதற்குக் காரணமாகும். எனவே, வான் பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை

மேலும்...
சின்ன நண்பியை தேடிச் சென்ற ஜனாதிபதி; பாட்டுப்பாடி மகிழ்ந்தார்

சின்ன நண்பியை தேடிச் சென்ற ஜனாதிபதி; பாட்டுப்பாடி மகிழ்ந்தார் 0

🕔29.Jan 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் கொழும்பு வந்து சந்தித்த, பதுளையைச் சேர்ந்த ஏழு வயதான எம்.என். அமானி ராயிதா எனும் சிறுமியை மறந்திருக்க முடியாது. நேற்று ஞாயிற்றுக்கிழமை பதுளை சென்றிருந்த ஜனாதிபதி, சிறுமி ராயிதாவின் வீட்டுக்கு வருகை தந்து, அவருடைய நண்பர்களுடன் பேசியும், பாட்டுப்பாடியும் மகிழ்ந்தார். அமானி ராயிதா என்ற சிறுமி தனது பெற்றோருடன் அண்மையில் ஜனாதிபதியை

மேலும்...
இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது

இந்தியாவுக்கு கடத்த முயற்சித்த 12 கிலோ தங்கம் சிக்கியது; கடத்தல்காரர்களும் கைது 0

🕔29.Jan 2018

இந்தியாவுக்கு கடல் வழியாக 12 கிலோகிராம் தங்கத்தை கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டது. உறுமலை கடற்பகுதியில், படகு ஒன்றில் மேற்படி தங்கத்தினை கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதோடு, கடத்த முயற்சித்த தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 100 கிராம் எடையுடைய 120 கட்டிகள், மேற்படி படகிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் பெறுமதி 07 கோடி

மேலும்...
தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம்

தனித்து போட்டியிட்டால் கட்சியைக் காப்பாற்றலாம்: அட்டாளைச்சேனையில் ஹக்கீம் 0

🕔29.Jan 2018

– முன்ஸிப் அஹமட் –உள்ளுராட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடுவதன் மூலம் தமது கட்சியை வளர்க்க முடியும் என்று, முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம் – தெரிவித்தார். அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கியத் தேசியக் கட்சியுடன்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில்

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டில் கொடுக்க வேண்டிய நிலையை, ஹக்கீமுக்கு ஏற்படுத்தியுள்ளோம்: சட்டத்தரணி அன்சில் 0

🕔28.Jan 2018

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுத்தால்தான், அட்டாளைச்சேனை பிரதேச சபையினை வென்றெடுக்க முடியும் என்கிற சூழ்நிலையை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு, தாங்கள் ஏற்படுத்தி விட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை

மேலும்...
கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு

கை, சேவலுக்கு ஆதரவு வேண்டி, தலவாக்கலை கூட்டத்தில் ஜனாதிபதி; பெருந்தொகை மக்கள் பங்கேற்பு 0

🕔28.Jan 2018

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஞாயிற்றுக்கிழமை, தலவாக்கலை விளையாட்டு மைத்தானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கை மற்றும் சேவல் சின்னங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.இக் கூட்டத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த, எஸ்.பீ. திஸாநாயக்க, இ.தொ.கா. பிரதி

மேலும்...
ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது

ஆப்கான் தலைநகரில் தற்கொலைத் தாக்குதல்; 95 பேர் பலி: தலிபான் அமைப்பு உரிமை கோரியது 0

🕔28.Jan 2018

 ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் பலியாகியுள்ளனர். வெடிபொருள் நிரப்பப்பட்ட அம்பியுலன்ஸ் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது, ஆகக் குறைந்தது 158 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரச பணியாளர்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் வீதியொன்றில் அமைந்துள்ள பொலிஸ் சாவடிக்கு அருகில், அம்பியுலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்று,

மேலும்...
வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை

வன்னி சிறுபான்மை முஸ்லிம்களைப் பின்பற்றி, நாரம்மல பிரதேச சபையிலும் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்குங்கள்: அமைச்சர் றிசாட் கோரிக்கை 0

🕔27.Jan 2018

  “வன்னி மாவட்டத்தில் ஜீவ மரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள், ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். அதுபோல் குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்ளை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத்

மேலும்...
நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார்

நசீரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை: மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் உறுதிப்படுத்தினார் 0

🕔27.Jan 2018

– மப்றூக் – தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சல்மான் ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு, அட்டாளைச்சேனையையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நசீரை நியமிப்பதில் சிக்கல்கள் இல்லை என்பதை, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட்  ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அப்பதவியில் இல்லாமலாகும் போது ஏற்படும் வெற்றிடத்துக்கு, அந்தக் கட்சியின் அங்கத்தவர் எவரொருவரையும் நாடாளுமன்ற

மேலும்...
வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம்

வாக்குச் சீட்டை படம் பிடித்த ஆசிரியர் கைது; தபால் மூல வாக்களிப்பின் போது சம்பவம் 0

🕔27.Jan 2018

தபால் மூல வாக்களிப்பின் போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினைப் படம் பிடித்த ஆசியர் ஒருவரை, கெபிடிகொல்லாவ பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஹொரவப்பொத்தானையில் இடம்பெற்றது. 44 வயதுடைய ஆசிரியர் ஒருவர், தபால் மூல வாக்களிப்பின்போது, தான் வாக்களித்த வாக்குச் சீட்டினை, வாக்களிப்பு நிலையத்தில் வைத்து தனது கைத்தொலைபேசி மூலமாக படம் பிடித்துள்ளார். இதனைக்

மேலும்...
02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது

02 கோடி ரூபாய் பெறுமதியான, போதை மாத்திரைகளுடன் பெண் கைது 0

🕔27.Jan 2018

போதைப் பொருள் மாத்திரைகளுடன் நாட்டுக்குள் நுழைவதற்கு முயற்சித்த நைஜீரியாவைச் சேர்ந்த பெண் ஒருவரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, சற்று முன்னர் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த பெண், சுமார் 02 கிலோகிராம் எடையுடைய மாத்திரைகளை தன்வசம் இதன்போது வைத்திருந்ததாகவும் அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்