பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க 0
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.