அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு 0
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு எனும் அமைப்பு, எழுத்து மூலம் இந்த முறைப்பாட்டினைச் செய்துள்ளது. குறித்த முறைப்பாட்டின் பிரதியொன்று ‘புதிது’ செய்தித்தளத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட