நாடாளுமன்றத்தை நாளை கூட்டுவதாக, சபாநாயகர் அறிவிப்பு 0
நாடாளுமன்றத்தை நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018.11.04 அன்று வெளியிட்ட 2095/50 இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சபை அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் கோரியுள்ளார். சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள