கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை 0
கட்டான பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பீட்டர் ஹப்புஆராச்சி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றின் பாதுகாப்பு அறைக்குள் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். வண்ணாத்திவில்லு பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.