எம்.எஸ். தௌபீக் எம்.பி.யானார்; தேர்தல்கள் திணைக்களம் உறுதி செய்தது 0
திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரீப் தௌபீக் (எம்.எஸ். தௌபீக்) மு.காங்கிரஸ் சார்பில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். எம்.எஸ். தௌபீக்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளமையினை தேர்தல்கள் திணைக்களம் இன்று சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.தே.கட்சியினால் மு.காங்கிரசுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்ட டொக்டர் ஏ.ஆர்.ஏ.